sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு: 179 பேர் பங்கேற்பு

/

மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு: 179 பேர் பங்கேற்பு

மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு: 179 பேர் பங்கேற்பு

மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு: 179 பேர் பங்கேற்பு


ADDED : ஏப் 14, 2025 04:10 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரியில் நேற்று நடந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வில் 179 பேர் பங்கேற்றனர்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த மத்திய பாதுகாப்பு படை மற்றும் கடற்படை தேர்வு புதுச்சேரியில் இரண்டு மையங்களில் நேற்று நடந்தது.

அதன்படி, ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை பிரிவு தேர்வு, லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9:00 முதல் 11:00 மணி வரையிலும், மதியம் 12:30 மணி முதல் 2:30 மணி வரையிலும், மாலை 4:00 முதல் 6:30 மணி வரையிலும் என 3, பிரிவாக நடந்தது. தேர்வுக்கு 112 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 48 பேர் தேர்வு எழுதினர்.

இதேபோல், தேசிய பாதுகாப்பு, கடற்படை பிரிவுக்கான தேர்வு லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லுாரியில் காலை 10:00 முதல் 12:30 மணி வரையிலும், மதியம் 2 முதல் 4:30 மணி வரையிலும் 2 கட்டமாக நடந்தது. இத்தேர்வுக்கு 186 பேர் விண்ணப்பித்த நிலையில், 131 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 298 பேரில், 179 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

யு.பி.எஸ்.சி. ஆய்வு அதிகாரி ஜோஸ்சனா, ஜி.எஸ்.டி., இணை ஆணையர் வடிவுகரசி, உதவி ஒருங்கிணைப்பாளர் யாசம் லட்சுமி நாராயணன், அரசு சார்பு செயலர்கள் ஜெய்சங்கர், கண்ணன் ஆகியோர் தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.

தேர்வு மையத்தில் ஒவ்வொரு அமர்வுக்கு தேர்வர்களின் இ-அட்மிட் கார்டு, புகைப்பட அடையாள அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டு, தேர்வறைக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் வசதிக்காக பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us