/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு துறைகளில் கொல்லைப்புற பணி நியமனத்திற்கு... செக்; ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
/
அரசு துறைகளில் கொல்லைப்புற பணி நியமனத்திற்கு... செக்; ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அரசு துறைகளில் கொல்லைப்புற பணி நியமனத்திற்கு... செக்; ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அரசு துறைகளில் கொல்லைப்புற பணி நியமனத்திற்கு... செக்; ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : ஜூலை 02, 2025 06:48 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு துறைகளில் கொல்லைப்புற பணி நியமனம் தொடர்பாகஅவசர அவசரமாக தலைமை செயலருக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசில் மொத்தம் 54 அரசு துறைகள் உள்ளன. இந்த அரசு துறைகள் அனைத்திற்கும் நிதித் துறை தற்போது அவசர அவசரமாக ஒரு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
உடனடியாக, அனைத்து அரசு துறைகளும் தங்களுடைய துறைகளில் நடந்த கொல்லைப்புற பணி நியமனம், சட்ட விரோத பணி நியமனங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாதமும் எங்களுடைய அரசு துறைகளில் எந்த கொல்லைப்புற நியமனமும், சட்ட விரோத பணி நியமனங்களும் நடக்கவில்லை என்றும், தவறான தகவலை அளித்தால் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு நன்கு தெரியும் என அந்தந்த துறை தலைவர்கள், துறை செயலர்களுக்கு சுய கையொப்பமிட்ட சான்றிதழ்களை சமர்பிக்கவும் உத்தரவிட உள்ளது.
எந்த ஆட்சி நடந்தாலும், ஆட்சியாளர்கள் குறுக்கு வழியில் ஆட்களை திணிப்பது வாடிக்கையாகிவிட்டது. அரசு துறைகளில் சந்து பொந்து கிடைத்தாலும் கூட ஏதாவது ஒரு ஓட்டைடையை கண்டுபிடித்து அங்கு தங்களை சுற்றி சுற்றி வந்தவர்களை வேலைக்கு அமர்த்திவிட்டு சென்றுவிடுவர். கால காலமாக நடந்து வந்த கொல்லைப்புற பணி நியமனத்திற்கு ஒரே அடியாக செக் வைக்கும் வகையில் தற்போது மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிப்பட்டுள்ளது.
திடீர் அதிரடி ஏன்:
அன்மையில் புதுச்சேரி பாலிடெக்னிக் 18 விரிவுரையாளர்கள் நியமனத்தில் கடும் அதிருப்தியை சுப்ரீம்கோர்ட் வெளிப்படுத்தியது. இந்த சட்ட விரோத நியமனத்தினை விசாரித்து, தற்போது பதவியில் இருந்தாலும் சரி, ஓய்வு பெற்றாலும் சரி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதுமட்டுமின்றி புதுச்சேரி அரசு துறைகளில் கொல்லைப்புறமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை கருணை அடிப்படையில் வேலை பெற்ற வவுச்சர் ஊழியர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கிலும், கடும் அதிருப்தியை நீதிமன்றம் வெளிபடுத்தியது.
கொல்லைபுற நியமனம் தொடர்பாக அனைத்து அரசு துறைகளிலும் தகவல் பெற்று தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தற்போது ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதையடுத்தே இப்போது கொல்லைபுற நியமனத்திற்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.