sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீப்பெட்டி கேட்டு பெண்களை மிரட்டிய சென்னை போட்டோகிராபர் கைது

/

தீப்பெட்டி கேட்டு பெண்களை மிரட்டிய சென்னை போட்டோகிராபர் கைது

தீப்பெட்டி கேட்டு பெண்களை மிரட்டிய சென்னை போட்டோகிராபர் கைது

தீப்பெட்டி கேட்டு பெண்களை மிரட்டிய சென்னை போட்டோகிராபர் கைது


ADDED : நவ 11, 2024 07:17 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி 45 அடி சாலையில் பேஷன் ஜூவல்லரி கடைக்குள் புகுந்து, மதுபோதையில் தீப்பெட்டி கேட்டு பெண்களை மிரட்டிய,சென்னை போட்டோகிராபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி முத்தியால் பேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகரன். 45 அடி வள்ளார் சாலையில் பேஷன் ஜூவல்லரி வைத்துள்ளார். இவரது கடையில் மூன்று பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று முன்தினம் 2:00 மணிக்கு கடைக்கு வந்த மர்ம நபர், தீப்பெட்டி கேட்டார். இல்லை என கூறி பெண்களை மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி, ஆநாகரிகமாக பேசி, கடையின் பூஜை இடத்தில் இருந்த தீப்பெட்டி எடுத்து கடைக்குள்ளே சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு சென்றார்.

மர்ம நபர் மிரட்டிய சம்பவ சி.சி.டி.வி., வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் சந்திரசேகரனிடம் புகார் பெற்ற பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சென்னை, செங்குன்றம், எடப்பாளையம், ஜீவா நகரைச் சேர்ந்த போட்டோ ஸ்டுடியோ நடத்தும் பழனி, 44; என்பதும், நண்பர்களுடன் புதுச்சேரிக்கு 45 அடி சாலையில் உள்ள மதுபான பாரில் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார்.

போதை தலைக்கேறிய பழனி பேஷன் ஜூவல்லரி கடைக்குள் புகுந்து பெண்களை மிரட்டியது தெரியவந்தது.

சென்னை சென்ற போலீசார், பழனியை கைது செய்து புதுச்சேரி கொண்டு வந்தனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பழனி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பழனி, 'புதுச்சேரி மக்களே என்னை மன்னித்து விடுங்கள். அதிக மதுபோதையில் 3 பெண்களிடம் தவறாக பேசிவிட்டேன். மூன்று பெண்களும் என்னை மன்னித்து விடுங்கள். புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் இதுபோல் யாரும் செய்யாதீர்கள்.

பெண்கள் நம் நாட்டு கண்கள் என மன்னிப்பு கேட்கும் வீடியோவை பெரியக்கடை போலீசார் வெளியிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us