sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சீமானுக்கு சம்மன் வழங்க போலீசார் சென்னை விரைவு

/

 சீமானுக்கு சம்மன் வழங்க போலீசார் சென்னை விரைவு

 சீமானுக்கு சம்மன் வழங்க போலீசார் சென்னை விரைவு

 சீமானுக்கு சம்மன் வழங்க போலீசார் சென்னை விரைவு


ADDED : டிச 03, 2025 06:31 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ள னர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம், கடந்த 22ம் தேதி வில்லியனுாரில் நடந்தது.

அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 'சீமான்' செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, சீமானுடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தை தொடர்ந்து வெளியேறிய தனியார் தொலைக்காட்சி நிருபரை, சீமானின் ஆதரவாளர்கள் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சீமான் உள்ளிட்டோர் மீது வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக முத்தியால்பேட்டை சுந்தரபாண்டியன், கடலுார் செல்வம் ஆகியோரை அழைத்து விசாரித்து அனுப்பினர்.

இவ்வழக்கு தொடர்பாக சீமானை விசாரணைக்கு ஆஜராக வேண்டி சம்மன் அளிக்க கடந்த 25ம் தேதி வில்லியனுார் போலீசார், சென்னை சென்றனர்.

ஆனால், சீமான் அன்று வீட்டில் இல்லாததால் திரும்பி வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள சீமா னை இன்று 3ம் தேதி சந்தித்து வரும் 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டிய சம்மன் வழங்க வில்லியனுார் போலீசார் சென்னை சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us