sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை பொறியாளருக்கு ஜாமின்

/

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை பொறியாளருக்கு ஜாமின்

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை பொறியாளருக்கு ஜாமின்

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை பொறியாளருக்கு ஜாமின்


ADDED : ஏப் 09, 2025 03:44 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உட்பட மூவருக்கு ஐகோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது.

காரைக்காலில் பொதுப்பணித்துறை சார்பில், பல கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடம், சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் டெண்டர் தொகையில் 20 சதவீதத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கமிஷன் தருவதாக சி.பி.ஐ.,க்கு புகார் சென்றது.

அதன்பேரில், சி.பி.ஐ., அதிகாரிகள் குழுவினர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன் ஆகியோர் கடந்த 22ம் தேதி மகள் திருமண நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க காரைக்காலுக்கு வந்தார்.

அப்போது, தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற் பொறியாளர் சிதம்பரநாதன் ஆகியோர் 8 கோடி மதிப்பில் சாலை பணிகளுக்கு மன்னார்குடியை சேர்ந்த கட்டுமான நிறுவனம் மூலம் டெண்டர் தொகையில் 1 சதவீதமாக ரூ. 8 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

ஒப்பந்ததார் இளமுருகு பணத்தை கொடுக்கும் போது சி.பி.ஐ., அதிகாரிகள் மூவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின், தலைமை பொறியாளர் தீனதயாளன் மற்றும் செயற்பொறியாளர் சிதம்பரநாதன் ஆகியோர் வீடுகள், அலுவலகங்களை சோதனை நடத்தி, கணக்கில் வராத 75 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் மூவரும் கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டு, காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட மூவருக்கும் சென்னை ஐகோர்ட் நேற்று ஜாமின் வழங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us