sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் ஊக்கத் தொகை' முதல்வர் ரங்கசாமி தகவல்

/

'விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் ஊக்கத் தொகை' முதல்வர் ரங்கசாமி தகவல்

'விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் ஊக்கத் தொகை' முதல்வர் ரங்கசாமி தகவல்

'விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் ஊக்கத் தொகை' முதல்வர் ரங்கசாமி தகவல்


ADDED : அக் 01, 2025 11:23 PM

Google News

ADDED : அக் 01, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்ககம் சார்பில், தேசிய விளையாட்டு தினம் மற்றும் கேலோ புதுச்சேரி திருநாள் பரிசளிப்பு விழா கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது.

விழாவிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். விளையாட்டு மற்றும் இளைஞர் நல செயலாளர் கிருஷ்ணமோகன் உப்பு, சாய் மண்டல தலைவர் கிஷோர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பேசியதாவது:-

விளையாட்டை ஊக்குவிப்பது அரசின் கடமை. விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு சொந்தமான இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். பள்ளிக்கூடங்களிலும் கிராமப்புற பகுதிகளிலும் மைதானங்களை அமைக்க அரசு முன்னெடுத்து வருகிறது.

விளையாட்டு வீரர்களுக்கு வசதி வாய்ப்பை ஏற்படுத்தி தருவது அரசின் கடமை. மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக காமராஜர் கல்வி உதவித்தொகை கொடுக்கப்படவில்லை. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் லேப்டாப் கொடுப்பதற்கான டெண்டர் முடிவடைந்துள்ளது. விரைவில் லேப்டாப் வழங்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us