/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுதானிய சிற்றுண்டி திட்டம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
/
சிறுதானிய சிற்றுண்டி திட்டம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
சிறுதானிய சிற்றுண்டி திட்டம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
சிறுதானிய சிற்றுண்டி திட்டம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
ADDED : பிப் 15, 2024 06:57 AM

திருக்கனுார் : புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவக்க விழா காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
கல்வித்துறை செயலர் ஆஷிஷ் மாதவ்ராவ் மோரே வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார்.
முதல்வர் ரங்கசாமி மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்தார்.
கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி நன்றி கூறினார். விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், துணை இயக்குனர் கொஞ்சு மொழி குமரன், இணை இயக்குனார் சிவகாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் தினை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய 20 கிராம் அளவிலான பிஸ்கட் மற்றும் மிட்டாய் வழங்கப்படுகிறது.

