ADDED : நவ 18, 2024 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்; திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சீனுவாசன் தலைமை தாங்கினார். விழாவையொட்டி, மாணவர்கள் இடையே விளையாட்டு போட்டிகள், நாடகம், பேச்சு, கவிதை, ஒவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.