/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா
/
மகளிர் மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா
ADDED : நவ 16, 2024 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு சார்பில் குழந்தைகள் தின விழா நடந்தது.
குழந்தைகள் நலத்துறை தலைவர் அனுராதா வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு அதிகாரி குரு பிரசாத், குழந்தை நல சிறப்பு மருத்துவர் ரவிகண்ணன், தலைமை மருத்துவ அலுவலர் முகுந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவையொட்டி, குழந்தைகளுக்கான ஓவியம் மற்றும் பொழுதுபோக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் நலத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.