ADDED : செப் 20, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுார் அருகே மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
வில்லியனுார் அடுத்த அரியூர், பாரதி நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் விமல்ராஜ், 33; புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் டிரைவராக வேலை செய்தார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
விமல்ராஜ் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால், கணவன், மனைவி இடையே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த விமல்ராஜ், துாக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.