sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை

/

புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை


ADDED : நவ 21, 2024 05:36 AM

Google News

ADDED : நவ 21, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று துவங்கிய சி விஜில் பாதுகாப்பு ஒத்திகையில், டி.ஐ.ஜி., மற்றும் சீனியர் எஸ்.பி., படகில் சென்று ஆய்வு செய்தனர்.

புதுச்சேரியில் கடற்கரை வழியாக தீவிரவாத ஊடுருவல் தடுப்பதை உறுதி செய்யும் வகையில், சி விஜில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கியது. தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து கடலோர காவல் பிரிவு போலீசாருடன், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., பழனிவேல், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் படகு மூலம் கடலுக்கு சென்று, மீன்பிடி படகுகளில் ஆய்வு செய்தனர்.

சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் கடல் வழியாக வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர். சி விஜில் பாதுகாப்பு ஒத்திகையொட்டி, புதுச்சேரி சட்டசபை, கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று இரவு 8:00 மணியுடன் நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us