/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண்ணீர் விட்ட கல்லுாரி மாணவிகள்
/
கண்ணீர் விட்ட கல்லுாரி மாணவிகள்
ADDED : மார் 09, 2024 02:56 AM

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லுாரி மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்தும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு, கல்லுாரி மாணவிகள் பலர் நேற்று காலை புதுச்சேரி கடற்கரை, காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்க கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்ட கல்லுாரி மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

