/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெரும்பாக்கம் நவசக்தி பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்
/
பெரும்பாக்கம் நவசக்தி பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்
பெரும்பாக்கம் நவசக்தி பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்
பெரும்பாக்கம் நவசக்தி பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்
ADDED : அக் 05, 2024 05:07 AM

வானுார் : பெரும்பாக்கம் ஓம் ஸ்ரீ நவசக்தி பீடத்தில் நவராத்திரி விழா துவங்கியது.
விழா கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று மாலை 6;00 மணிக்கு அன்னை துர்கை அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி வரும் 12ம் தேதி வரை தினமும் மாலை 6:00 மணிக்கு துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்களில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
வரும் 11ம் தேதி சரஸ்வதி பூஜை விழாவும், 12ம் தேதி காலை 9:00 மணிக்கு ஓம் ஸ்ரீ நவசக்தி ஸ்ரீ நாகமுத்து மாரியம்மனுக்கு 108 பால்குட அபிேஷகமும் நடக்கிறது.
இரவு 8:00 மணிக்கு விஜயதசமி ஊஞ்சள் விழா, அன்னை வீதியுலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை சீனுவாச சுவாமிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.