ADDED : செப் 04, 2026 09:14 AM
அ நிறம் | அளவு
ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் உள்ளதால் அகற்ற வேண்டும்.
செல்வம், வேல்ராம்பட்டு.
காலி மனையில் புதர்கள்
தந்தை பெரியார் நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள காலி மனையில் புதர்கள் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது.
பாஸ்கர், புதுச்சேரி.
டவுன் பஸ் தேவை தேங்காய்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் உள்ளதால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ராணி, தேங்காய்திட்டு.
நாய்கள் தொல்லை
தட்டாஞ்சாவடி பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
பரணி, தட்டாஞ்சாவடி. மது குடிப்பதால் மக்கள் அச்சம் கோரிமேடு சாலையில் மது குடிப்பதால் மக்கள் அச்சமடைந்து சென்று வருகின்றனர்.
பாரதி, கோரிமேடு.
