ADDED : ஆக 16, 2026 05:41 PM
வாகன ஓட்டிகள் அவதி: லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர் மெயின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
சதாம் உசேன், கிருஷ்ணா நகர்.
குடிமகன்களால் அச்சம் : தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டையில் திறந்த வெளியில் சிலர் மது அருந்துவதால், அங்கு பணி புரியும் ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.
மஞ்சுளா, தட்டாஞ்சாவடி.
விபத்து அபாயம் : இந்திரா, ராஜிவ் சதுக்கங்களில் சிக்னல் போட்டிருந்தாலும், சில வாகன ஓட்டிகள் விதி மீறி செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராஜா, கொட்டுப்பாளையம்.
பஸ் நிறுத்தம் அருகே பள்ளம்: வழுதாவூர் – திருக்கனுார் சாலையில் வழுதாவூர் பஸ் நிறுத்தம் அருகே மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
மணிமேகலை, வழுதாவூர்.
சாலை போடப்படுமா?: கருவடிக்குப்பம், சண்முகா நகர் மூன்றாவது தெருவில், செம்மண் கொட்டி ஒரு ஆண்டாகியும், தார் சாலை, பாதாள சாக்கடை அமைக்கப்படாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பிரமிளா, கருவடிக்குப்பம்.
தெரு விளக்கு எரியுமா?: அபிேஷகப்பாக்கம் முதல் தேடுவார்நத்தம் வரை இரவு நேரங்களில் தெருமின் விளக்குகள் எரியாமல் இருள்சூழ்ந்து காணப்படுவதால், பொது மக்கள் அச்சமடைகின்றனர்.
சரண்ராஜ், தேடுவார்நத்தம்.
