/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்கம்
/
கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : ஏப் 04, 2025 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில் கான்கிரிட் வாய்க்கால் அமைக்கும் பணியினை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
முதலியார்பேட்டை தொகுதி ஜெயமூர்த்தி ராஜா நகரில் இருந்து ஜோதி நகர் வரை பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
இப்பணியினை தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் தலைமை தாங்கி, பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில்,பொதுப்பணித்துறை, நீர் பாசன கோட்ட செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் பிரித்திவிராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.