/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வருமான வரி அலுவலகத்தில் இரங்கல் கூட்டம்
/
வருமான வரி அலுவலகத்தில் இரங்கல் கூட்டம்
ADDED : நவ 23, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி வருமான வரித்துறையில் ஆய்வாளர் செல்வாவின் மறைவிற்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, வருமான வரித்துறை புதுச்சேரி இணை ஆணையர் செல்வி ஆறுமுகம் தலைமை தாங்கி, செல்வா படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, வருமான வரி ஊழியர்களின் மண்டல செயலாளர் கோவிந்தன், அதிகாரிகளின் சங்க செயலாளர்கள் செங்குட்டுவன், தமிழ்செல்வன், அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மறைந்த செல்வாவிற்கு, மவுன அஞ்சலி செலுத்தினர்.