ADDED : நவ 18, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி ; முத்திரையர்பாளையத்தில் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் குண்டுசாலை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, முத்திரையர்பாளையம் அணைகரை வீதியை சேர்ந்த வினோத், 30, என்பவரது கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் இருந்த 1,000 ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் வினோத் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.