ADDED : ஜன 16, 2025 05:51 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காங்., கமிட்டியின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில், புதுச்சேரி, தமிழக தலைவர்கள் பங்கேற்றனர்.
டில்லியில் அகில இந்திய காங்., கமிட்டியின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் எம்.பி., அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விஜய் வசந்த் எம்.பி., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
