sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் தகவல்

/

மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் தகவல்

மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் தகவல்

மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் தகவல்


ADDED : ஜன 21, 2025 06:32 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு, சி.பி.ஐ. விசாரணை கோரி ஐகோர்ட்டை நாடுவோம் என காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி அரசு தீபாவளிக்கான இலவச அரிசியை ரேஷன்கடை மூலம் வழங்கியது. அதன்பின் ரேஷன் கடைகளை திறந்து, இலவச அரிசி வழங்கப்படவில்லை. ஊழியர்களுக்கும் சம்பளமும் தரவில்லை.

உணவு பாதுகாப்பு சட்டப்படி 20 கிலோ இலவச அரிசி ஏழை மக்களுக்கு முறையாக வழங்கிட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், விவசாயிகள், முழுமையாக வீடு இழந்தவர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை.

மத்திய குழு புயல் சேதத்தை பார்வையிட்டதோடு சரி, நிவாரணம் தருவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

புதுச்சேரி அரசும் மத்திய அரசை நாடி நிவாரணம் பெற தவறிவிட்டது.

அரசு பல்வேறு பணியிடங்களை நிரப்பியது. ஆனால், அதில் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை. இதுகுறித்து கவர்னர் விசாரணை நடத்திட வேண்டும்.

மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதால், சி.பி.ஐ., விசாரணை கோரி ஐகோர்ட்டை நாடுவோம். புதிதாக மது ஆலைகள் தேவையில்லை. தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி, பாதிக்கப்பட்ட விவகாரத்தில் கைது நடவடிக்கை சரியாக இல்லை. ஆளும் கட்சியினர் தலையீடு உள்ளது.

மாணவியிடம் அத்துமீறல் குறித்து முழு விசாரணை நடத்திட வேண்டும். இல்லையெனில், காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us