/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., நடைபயணம்: நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்
/
காங்., நடைபயணம்: நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்
காங்., நடைபயணம்: நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்
காங்., நடைபயணம்: நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்
ADDED : பிப் 18, 2026 04:41 AM

புதுச்சேரி: முன்னாள் துணை சபாநாயகருமான செல்வம் என்.ஆர்.காங்கில் இருந்து விலகி, தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்., கட்சியில் இணைந்தார்.
காங்., சார்பில், புதுச்சேரிக்கான நடைபயணம் கடந்த மாதம் 21ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதன் நிறைவு நாளாக நேற்று நடந்த நடைபயணத்தில் காங்., தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் பங்கேற்றார்.
அதில், மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, வல்சராஜ், கமலக்கண்ணன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன் ,சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் உட்பட ஏராளமான காங்., தொண்டர்கள் பங்கேற்றனர்.நடைபயணம், கொக்கு பார்க் அருகில் துவங்கி, காமராஜ் சாலை, நேருவீதி வழியாக மிஷன் வீதியில் நிறைவடைந்தது.
மிஷன் வீதியில் நடந்த நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் அக்கட்சியில் இருந்து விலகி, பொதுச்செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்., கட்சியில் இணைந்தார்.

