sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மின் கட்டணம் நிர்ணயிக்க 29ம் தேதி கருத்து கேட்பு

/

மின் கட்டணம் நிர்ணயிக்க 29ம் தேதி கருத்து கேட்பு

மின் கட்டணம் நிர்ணயிக்க 29ம் தேதி கருத்து கேட்பு

மின் கட்டணம் நிர்ணயிக்க 29ம் தேதி கருத்து கேட்பு


ADDED : ஏப் 26, 2025 04:19 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி மின்துறை,வரும் ஐந்தாண்டிற்கு மின் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 29ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து மின்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மின்துறை ஒவ்வொரு ஆண்டும் 2,000 கோடி ரூபாய் அளவிற்கு மின்சாரம் கொள்முதல் செய்து, மின் நுகர்வோருக்கு விநியோகம் செய்கிறது.

கொள்முதலுக்கும் மின் விநியோகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சமன் செய்யும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண உயர்வை இணைமின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்து, மின் கட்டண உயர்வை அமல்படுத்தி வருகிறது.

அதன்படி, இந்த நிதியாண்டு 2025-26 முதல் 2029-30 வரையிலான ஐந்தாண்டு வருவாய் மற்றும் மின்கட்டணம் நிர்ணயம் தொடர்பான மனுக்கள் மீது பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இக்கூட்டம் வரும் 29ம் தேதி காலை 11:00 மணிக்கு, புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள பி.எம்.எஸ்.எஸ்.எஸ்., அரங்கில் நடைபெற வுள்ளது.






      Dinamalar
      Follow us