ADDED : செப் 07, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: தவளகுப்பம் அடுத்த தேடுவார்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் 42; சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 2ம் தேதி தனது மனைவி சேஷம்மா, 38, பைக்கில் அழைத்து கொண்டு, அரியாங்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
புதுச்சேரி - கடலுார் சாலை நோணாங்குப்பம் படகு குழாய் அருகே சென்ற போது, பின்னால் வந்த டாடா லோடு கேரியர் வாகனம், முந்தி செல்ல முயன்ற போது, பைக்கின் மீது மோதியது.
இதில், நிலை தடுமாறி கணவன், மனைவி சாலையில் விழுந்து காயமடைந்தனர். பொது மக்கள் அவர்களை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் டிரைவர் கடலுார் மாவட்டம், சின்ன வெள்ளக்கரை பகுதியை சேர்ந்த கலையரசன் மீது கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.