ADDED : ஜன 16, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுலத்தில் அமைந்துள்ள கோமாதா கோவிலில் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.
பசுக்கள், காளைகள், கன்றுகள், குதிரைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோ பூஜை, அஸ்வ பூஜை நடந்தது.
ராஜா சாஸ்திரி தலைமையில் 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் பூஜை செய்து பசுக்களுக்கு வழங்கப்பட்டன. கோ பூஜையில் குருகுல மாணவர்கள் வேதகோஷம் முழங்கினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மேத்தா, சீனு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

