sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலி இணையதளத்தில் கிரிக்கெட் போட்டிl; டிக்கெட் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

/

போலி இணையதளத்தில் கிரிக்கெட் போட்டிl; டிக்கெட் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

போலி இணையதளத்தில் கிரிக்கெட் போட்டிl; டிக்கெட் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

போலி இணையதளத்தில் கிரிக்கெட் போட்டிl; டிக்கெட் சைபர் கிரைம் போலீசார் விசாரணை


ADDED : ஜன 19, 2025 06:39 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இந்தியா - இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டிக்கு, போலி இணையதளம் உருவாக்கி டிக்கெட் விற்பனை செய்த மோசடி கும்பல் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இரு அணிகளுக்கு இடையே வரும் 22ம் தேதி முதல் பிப்., 12ம் தேதி வரை, 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, ஐந்து டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

டி20 தொடரின் இரண்டாவது போட்டி, சென்னையில் 25ம் தேதி நடக்கிறது. இப்போட்டியை நேரில் காண, புதுச்சேரி தட்டாஞ்சாவடி, சுப்பையா நகரைச் சேர்ந்த சக்தி சமூக வலைதளத்தில், bookcricketicket.co.in லிங்க்கில் டிக்கெட் எடுத்தார்.

இணையதள முகவரியில் மூன்று பேருக்கு டிக்கெட் எடுக்க, அதற்கான தொகை, 6,360 ரூபாய் செலுத்தினார்.

ஆனால், புக்கிங் ஆன டிக்கெட் ஏதும் வரவில்லை. இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.

விசாரணையில், சைபர் கிரைம் மோசடி கும்பல் கிரிக்கெட் போட்டிக்கான போலியாக டிக்கெட் புக்கிங் இணையதள பக்கத்தை உருவாக்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என, விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'சமூக வலைதளத்தில் வரும் அங்கீகாரம் இல்லாத இணையதளம் வழியாக டிக்கெட் புக்கிங் செய்யக்கூடாது. டிக்கெட் புக் செய்யும் போலி இணையதளத்தை முடக்கம் செய்ய கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.






      Dinamalar
      Follow us