sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

/

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா


ADDED : ஜூலை 24, 2025 03:34 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி சார்பில், இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி, பரிசளிப்பு விழா நடந்தது.

சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில், இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி, தவளக்குப்பம் அடுத்த பெரியக்காட்டுப்பாளையம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. புதுச்சேரி, தமிழக பகுதியைச் சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன.

இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில், முத்திரையர்பாளையம் எம்.சி.சி., அணி முதல் இடத்தையும், பெரியக்காட்டுப்பாளையம் சேலஞ்சர்ஸ் அணி இரண்டாம் இடத்தையும், பெருங்களூரு ஏ.சி.சி.பி., அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதல் பரிசாக, 20 ஆயிரம், இரண்டாம் பரிசு 15 ஆயிரம், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம், நான்காம் பரிசாக 5 ஆயிரம், ஐந்தாம் பரிசாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக, தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், மனோ, நேஷனல் ஆங்கிலப்பள்ளி தாளாளர் கிரண்குமார், சிவசக்தி முருகன், மதலப்பட்டு பஞ்சாயத்து ஊராட்சி தலைவர் மாறன் ஆகியோர் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.






      Dinamalar
      Follow us