sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

10 பேரிடம் ரூ. 10 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

/

10 பேரிடம் ரூ. 10 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

10 பேரிடம் ரூ. 10 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

10 பேரிடம் ரூ. 10 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை


ADDED : அக் 19, 2025 03:34 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்கள் உட்பட 10 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 10 லட்சம் இழந்துள்ளனர்.

வடமங்கலத்தை சேர்ந்த பெண்ணை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதைநம்பி, மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக அப்பெண் ரூ. 7 லட்சத்து 8 ஆயிரத்து 112 முதலீடு செய்தார்.

பின், அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், சாரத்தை சேர்ந்தவர் 55 ஆயிரம், அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 55 ஆயிரம், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் 45 ஆயிரம், முதலியார்பேட்டையை சேர்ந்தவர் 20 ஆயிரத்து 500, அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்த பெண் ஆன்லைனில் துணி ஆர்டர் செய்து 5 ஆயிரத்து 426, பூமியான்பேட்டையை சேர்ந்தவர் 22 ஆயிரத்து 796, சேதராப்பட்டைச் சேர்ந்தவர் 39 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 44 ஆயிரம் என, 10 பேர் மோசடி கும்பலிடம் 10 லட்சத்து 17 ஆயிரத்து 630 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us