/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உடனடி கடன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
/
உடனடி கடன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
உடனடி கடன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
உடனடி கடன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ADDED : ஆக 16, 2025 11:38 PM
மொபைலில் வரும் உடனடி கடன் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, சைபர் மோசடி கும்பலிடம் சிக்க வேண்டாம் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
சமீப காலங்களாக அவசர தேவைக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக ஆன்லைனில் பல்வேறு ஆப்கள் உலா வருகின்றன. அதனை காணும் பொதுமக்கள் சிலர் உடனடியாக பணம் கிடைக்கிறது என்பதால், அந்த மொபைல் ஆப்களை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கும் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களை பதிவிடுகின்றனர்.
பின், அந்த விவரங்களை கொண்டு, சைபர் கிரைம் மோசடி கும்பல் கடன் பெற்றவர்களை தொடர்பு கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று, புதுச்சேரி சைபர் போலீஸ் நிலையத்தில் தினசரி பல்வேறு புகார் வருகின்றன.
இதுகுறித்து சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'மொபைல் ஆப் மூலம் உடனடி கடன் மற்றும் குறைந்த வட்டியில் லோன் தருவதாக ஆன்லைனில் பல்வேறு விளம்பரங்கள் வருகின்றனர்.
அதை நம்பி பொதுமக்கள் கடன் பெற்ற பிறகு, அவர்களுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டுகின்றனர்.
இதனால், பலரும் மர்ம நபர்களுக்கு பணத்தை அனுப்பி லட்சக்கணக்கில் ஏமாந்து வருகின்றனர். ஆகையால், ஆன்லைனில் உலா வரும் உடனடி கடன் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம். மேலும், தங்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டினால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், குறைந்த முதலீட்டில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் செய்து தருகிறோம் என்று ஆசை வார்தை கூறினால், யாரும் நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். பிடெக்ஸ் கொரியர், ட்ராய், மும்பை போலீசில் இருந்து பேசுவதாக கூறி உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என்று கூறினால் அவர்களது தொடர்பை உடனடியாக துண்டித்து விட வேண்டும்.
வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம்; பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என, ஆசை வார்த்தை கூறினால், அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் உங்களை தொடர்பு கொண்டு, பணம் தருவதாக கூறி வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால் அதனை நம்ப கூடாது.
மேலும், பணத்திற்காக அவர்களிடம் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகள் கொடுத்தால், அவர்கள் ஈடுபடும் சைபர் மோசடியில் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கருதி போலீசார் மூலம் கைது நடவடிக்கை எடுக்க நேரிடும்.
உங்களது வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறி, வாட்ஸ் ஆப் மூலமாக ஏதேனும் லிங்க் மற்றும் ஆப் மெசேஜ் வந்தால் அதனை லிங்க் செய்ய வேண்டாம். இது சைபர் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் புது, புது யுக்திகள் ஆகும்.
மேலும், சைபர் மோசடி தொடர்பாக சந்தேகம் மற்றும் புகார்களை தெரிவிக்க 1930 மற்றும் 0413-2276144, 9489205246 மொபைல் எண் மற்றும் cybercell-police@py.gov.in இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

