ADDED : ஏப் 13, 2026 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகளை காணவில்லை என, தாய் போலீசார் புகார் செய்தார்.
தவளக்குப்பம், தானாம்பாளையத்தை சேர்ந்தவர் கலைமணி மகள் வெண்ணிலா. இவர், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் பி.சி.ஏ., படித்து வருகிறார்.
இவரது தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாலை வரை வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தாய் கொடுத்து புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

