/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய ஆவண காப்பகத்தில் உதய நாள் விழா
/
தேசிய ஆவண காப்பகத்தில் உதய நாள் விழா
ADDED : மார் 13, 2024 06:48 AM

புதுச்சேரி : புதுச்சேரி ஜீவானந்தபுரத்தில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் உதய நாள் விழா நடந்தது.
விழாவில் ஆவணக் காப்பகத்தின் உதவி இயக்குனர் முருகேசன் வரவேற்று, புதுச்சேரியில் காப்பாற்றப்பட்டு வரும் ஆவணங்கள், அவை பாதுகாக்கப்படும் முறைகள் குறித்து பேசினார்.
காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் செல்வராஜ், வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பேராசிரியர்கள் வெங்கடசுப்புராய நாயக்கர், வேல்முருகன் ஆகியோர் உரையாற்றினர்.
விழாவில் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வரலாற்று மற்றும் பிரெஞ்சு துறைகளின் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு ஆவண காப்பகத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் பழமையான ஆவணங்கள், ஓலைச்சுவடிகள், அவற்றை பாதுகாக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இங்கு, பழமையான பிரெஞ்சு ஆவணங்கள், பழைய வரலாற்று ஆவணங்கள், தென்னிந்தியாவில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இருந்து பெறப்படும் ஆவணங்கள், தனியார் ஆவணங்கள் அனைத்தும் விஞ்ஞானபூர்வ முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆவண விவரங்களை ஆராய்ச்சியாளர்களுக்கு அளித்தல், ஆவணங்கள் பாதுகாப்பு, பயிற்சி நுாலக வசதி உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.

