நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : வில்லியனுாரில் இறந்த ஊனமுற்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு மெயின் ரோட்டில் சூப் கடை அருகில் 40 வயது மதிக்கத் தக்க ஊனமுற்ற நபர் இறந்து கிடந்தார். தகவலறிந்த வில்லியனுார் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.