/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவிக்கு கொலை மிரட்டல்; வாலிபருக்கு போலீஸ் வலை
/
மாணவிக்கு கொலை மிரட்டல்; வாலிபருக்கு போலீஸ் வலை
ADDED : ஜன 20, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 17ம் தேதி மதியம் தோழிகளுடன் பாரதி பூங்காவில் பாணி பூரி சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அங்கு வந்த நெல்லித்தோப்பு முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த சாம்பசிவம் மகன் முரளி, 23, என்பவர் மாணவியிடம் ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என, கேட்டு அவரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து முரளியை தேடி வருகின்றனர்.