ADDED : மார் 23, 2026 08:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டு எதிரில் ஆபாமாக பேசிக் கொண்டிருந்தவரை தட்டி கேட்டவருக்கு தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
கரியமாணிக்கம் முதல் தெருவைச் சேர்ந்தவர் சிவரஞ்சினி 35, இவர் கடந்த 17 ம் தேதி இரவு வீட்டு மாடியில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர் வீட்டை சேர்ந்த அருள்ஜோதி 35, என்பவர் வீட்டில் டி.வி., பார்த்து கொண்டிருந்த சிவரஞ்சினியில் கணவர் காமராஜை பார்த்து ஆபாசமா பேசிக் கொண்டிருந்தார். இதனை தட்டிக்கேட்ட காமராஜை அருள்ஜோதி, அவரது மனைவி மகேஸ்வரி, உறவினர் தாமோதரன், பழனியப்பன், தினகரன் ஆகியோர் உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சிவரஞ்சினி கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

