ADDED : பிப் 09, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: முன்விரோத தகராறில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியக்காலாப்பட்டை சேர்ந்தவர் சுகில்ராஜ், 34; மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் நோணாங்குப்பத்தை சேர்ந்த லோகு, என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
சுகில்ராஜ், தனது பாட்டி வீடான வீராம்பட்டினத்திற்கு நேற்று சென்று விட்டு, முருங்கப்பாக்கம் வழியாக வந்தார்.
முருங்கப்பாக்கம் சந்திப்பில் நின்ற லோகு அவரை வழிமறித்து, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, சுகில்ராஜ் புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து லோகுவை தேடி வருகின்றனர்.

