ADDED : அக் 26, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் மகன் மதன்குமார், 18; நடன கலைஞர். நேற்று முன்தினம் சோலை நகர் கல்லரை வீதியில் நின்று கொண்டிருந்தார்.
அவ்வழியாக வந்த சோலை நகரை சேர்ந்த தினேஷ், கிரி ஆகிய இருவரும் மதன்குமாரிடம் தகராறு செய்தனர். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து, மதன்குமாரை செங்கல்லால், தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, தினேஷ், கிரியை தேடி வருகின் றனர்.

