தென்னை சாகுபடியில் வண்டு மேலாண்மை செயல் விளக்கம்
தென்னை சாகுபடியில் வண்டு மேலாண்மை செயல் விளக்கம்
ADDED : செப் 16, 2026 02:44 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆத்மா திட்டத்தின் கீழ் மதகடிப்பட்டு பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில்,சன்னியாசிகுப்பம் கிராமத்தில் தென்னையில் காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூன் வண்டு மேலாண்மை குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.
மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் நடராஜன், துணை வேளாண்மை அலுவலர் பக்கிரி, மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரிமாணவிகள் கலந்து கொண்டு,விவசாயிகளுக்கு இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தி சிகப்பு கூன்வண்டு மற்றும் காண்டாமிருக வண்டு மேலாண்மை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இன கவர்ச்சி பொறி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மதகடிப்பட்டு வட்டார தொழில்நுட்ப மேலாளர் குமரன் செய்திருந்தார்.
