sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேஷ்கா பிரகிருதி பரிக் ஷன் அபியான் திட்டம் மக்களின் உடல் நல தகவல்கள் பதிவேற்றம்

/

தேஷ்கா பிரகிருதி பரிக் ஷன் அபியான் திட்டம் மக்களின் உடல் நல தகவல்கள் பதிவேற்றம்

தேஷ்கா பிரகிருதி பரிக் ஷன் அபியான் திட்டம் மக்களின் உடல் நல தகவல்கள் பதிவேற்றம்

தேஷ்கா பிரகிருதி பரிக் ஷன் அபியான் திட்டம் மக்களின் உடல் நல தகவல்கள் பதிவேற்றம்


ADDED : டிச 19, 2024 06:42 AM

Google News

ADDED : டிச 19, 2024 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மத்திய அரசின் 'மனம், உடல் அமைப்பு' திட்டத்தை உலக சாதனையாக்காக, ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மாணவர்கள் புதுச்சேரி பொது மக்களின் உடல் நல தகவல்களை மொபைல் செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் 'தேஷ் கா பிரகிருதி பரிக் ஷன் அபியான்' (மனம், உடல் அமைப்பு) என்ற ஆரோக்கிய திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டத்தில், நாடு முழுதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் உடல் ஆரோக்கியத்தை ஆயுர்வேத முறையில் மேம்படுத்தும் வகையில் சிறப்பு செயலி மற்றும் வெப்சைட் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியில் நாடு முழுதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தன்னார்வலர்களை ஆயுஷ் அமைச்சகம் ஈடுபடுத்தி உள்ளது. வீடுகள், கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு செல்லும் தன்னார்வலர்கள் அங்கு உள்ளவர்களின் மொபைல் போன்களில் சிறப்பு செயலியை பதிவிறக்கம் செய்து, அவர்களின் கண், பல், நாக்கு, உடல் எடை, உடல்நல பிரச்னைகளை கேட்டறிந்து பதிவு செய்கின்றனர்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆயுர்வேத மருத்துவ வழிகாட்டல்கள் வழங்கப்படும். பதிவு செய்த நபருக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் சான்றிதழ் மொபைலில் வழங்கப்படுகிறது.

நாடு முழுதும் உள்ள மக்களின் உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்தை இந்த ஆயுர்வேத திட்டத்தின் மூலம் மேம்படுத்தி இதனை உலக சாதனையாக பதிவு செய்ய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பொது மக்களின் உடல் நல பிரச்னைகளை மொபைல் செயலியில் பதிவு செய்யும் பணியில் புதுச்சேரி, மாகியில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 ஆயிரம் பேரை பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us