/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தர்ம சம்ரக் ஷண சமிதி சத சண்டி ஹோமம்
/
தர்ம சம்ரக் ஷண சமிதி சத சண்டி ஹோமம்
ADDED : அக் 08, 2024 03:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திராணி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிப்பு
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சத சண்டி ஹோமத்தில், 5ம் நாளான நேற்று அம்பாள் வெள்ளை குதிரையில் இந்திராணி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி உலக அமைதிக்காக, 5ம் ஆண்டு சத சண்டி ஹோமம், இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் கடந்த 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
5ம் நாளான நேற்று கோ பூஜை, கன்யா, வடு, தம்பதி பூஜைகளும், 13 பூர்ணாஹூதி, பிறகு மகா பூர்ணாஹூதி நடந்தது. முன்னதாக வெள்ளை குதிரையில் இந்திராணி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார்.
மாலையில் சுகுமார் குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது.

