ADDED : ஆக 28, 2026 05:21 PM
ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேசுகையில், ‘தினமலர்–பட்டம்’ இதழ், புதுச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளையும் ஒன்றிணைக்கின்றது.
அனைத்து பள்ளி மாணவர்களும், வினாடி–வினா போட்டியில் பங்கேற்கும் போது, அங்கு ஒரு பயனுள்ள ஆற்றல்மிக்க விஷயம் நடக்கிறது. எனவே தினமலர் குழுவின் கூட்டு முயற்சியை நாம் மதிக்க வேண்டும்.
வினாடி போட்டியில் கோப்பைகளையும், பதக்கங்களையும் வெல்லப்போகும் ஒவ்வொருவருக்கும், மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற திட்டமிட்டிருக்கும் மாணவர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள். இந்த போட்டியில் நீங்கள் பங்கேற்றால் ஒட்டுமொத்த வெற்றியாளராக உருவெடுக்கலாம்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த, புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், வினாடி-வினா மற்றும் பட்டம் அமைப்பு குழுவினருக்கும் பாராட்டுக்கள்,’ என்றார்.
