ADDED : அக் 12, 2011 12:54 AM
புதுச்சேரி : உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 12வது ஆண்டு ஓடும் ரயிலில்
ஓவியப் போட்டி நடந்தது.
புதுச்சேரி மாநில ஓவியர் மன்றம் சார்பில் உலக
சுற்றுலா தினத்தை முன்னிட்டு 12வது ஆண்டு ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி
நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்மாமணி மன்னர் மன்னன், பாரதி, ஓவியர் மாலதி
ராஜவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். ரயில் நிலைய மேலாளர் மணிராஜன்
வரவேற்றார். பாரதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக
சமூகநலத்துறை அமைச்சர் ராஜவேலு கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டியில்
புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் உள்ளிட்ட 42 பள்ளிகளை
சேர்ந்த 762 மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். விழுப்புரம் ரயில்
நிலையத்திற்கு வந்த மாணவர்களை நிலைய மேலாளர் சிலாஸ் பிரேம்தன் லகேரா
வாழ்த்தி வரவேற்றார். அதனை தொடர்ந்து ஓவிய மன்ற தலைவர் இபேர் மாணவ
மாணவியர்களுக்கு சான்றி தழ்களை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பா டுகளை
ஓவியர்கள் எமில், ராமலிங்கம், முருகையன் ஆகியோர் செய்தனர்.

