/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் 'தினமலர்' வினாடி - வினா போட்டி
/
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் 'தினமலர்' வினாடி - வினா போட்டி
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் 'தினமலர்' வினாடி - வினா போட்டி
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் 'தினமலர்' வினாடி - வினா போட்டி
ADDED : டிச 07, 2024 07:21 AM

புதுச்சேரி: 'தினமலர் பட்டம்' இதழ் சார்பில் தவளக்குப்பம் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் வினாடி வினா போட்டி நடந்தது.
புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் பரிசு வெல்' என்ற மெகா வினாடி வினா போட்டி நடக்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க, பள்ளி அளவிலான அணிகள் தேர்வு செய்யும் போட்டி, தவளக்குப்பம் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் கார்த்திகா தலைமை தாங்கினார்.
பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். முதல் நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகினர். தலா 2 பேர் கொண்ட 8 அணிகள் இறுதி சுற்றில் பங்கேற்றது.
இதில் 6ம் வகுப்பு மாணவர் சிரேயாஸ், 7 ம் வகுப்பு மாணவர் நித்தாகரன் அணி முதலிடம் பிடித்தது. 8ம் வகுப்பு ஹர்ஷிகா, ஹரிணி அணி 2ம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த இரு அணிகளும் மெகா வினாடி வினா போட்டிக்கு தகுதி பெற்றன.