sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிள்ளைச்சாவடியில் மரக்கன்று வழங்கல்

/

பிள்ளைச்சாவடியில் மரக்கன்று வழங்கல்

பிள்ளைச்சாவடியில் மரக்கன்று வழங்கல்

பிள்ளைச்சாவடியில் மரக்கன்று வழங்கல்


ADDED : பிப் 06, 2025 07:06 AM

Google News

ADDED : பிப் 06, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; பிள்ளைச்சாவடியில் 'ஒரு வீடு ஒரு மரம்' திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு 1,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற இயக்கத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் புதுச்சேரி பசுமை பரப்பை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ஒரு வீடு ஒரு மரம், நகர்புற தோட்டம், கிராமப்புற காடு வளர்ப்பு, கோவில் காடுகளை மீட்டெடுத்தல், பசுமை பள்ளி வளாகம், பசுமை தொழிற்சாலைகள் உட்பட 7 கூறுகளை கொண்டு இத்திட்டத்தின் மூலம் நடப்பு பருவ மழை காலத்திற்குள் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 'ஒரு வீடு ஒரு மரம்' திட்டத்தின் கீழ் பிள்ளைச்சாவடி கிராமத்தில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட 1000 மரகன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

சுற்றுச்சுழல் துறை உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையில், சுற்றுச்சூழல் துறை இளநிலை பொறியாளர் புகழேந்தி, திட்ட அலுவலர்கள் சாந்தலட்சுமி, விமல்ராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us