/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிள்ளைச்சாவடியில் மரக்கன்று வழங்கல்
/
பிள்ளைச்சாவடியில் மரக்கன்று வழங்கல்
ADDED : பிப் 06, 2025 07:06 AM

புதுச்சேரி; பிள்ளைச்சாவடியில் 'ஒரு வீடு ஒரு மரம்' திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு 1,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற இயக்கத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் புதுச்சேரி பசுமை பரப்பை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஒரு வீடு ஒரு மரம், நகர்புற தோட்டம், கிராமப்புற காடு வளர்ப்பு, கோவில் காடுகளை மீட்டெடுத்தல், பசுமை பள்ளி வளாகம், பசுமை தொழிற்சாலைகள் உட்பட 7 கூறுகளை கொண்டு இத்திட்டத்தின் மூலம் நடப்பு பருவ மழை காலத்திற்குள் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 'ஒரு வீடு ஒரு மரம்' திட்டத்தின் கீழ் பிள்ளைச்சாவடி கிராமத்தில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட 1000 மரகன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
சுற்றுச்சுழல் துறை உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையில், சுற்றுச்சூழல் துறை இளநிலை பொறியாளர் புகழேந்தி, திட்ட அலுவலர்கள் சாந்தலட்சுமி, விமல்ராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.