/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதாரம் இன்றி குற்றம் சாட்டக்கூடாது
/
ஆதாரம் இன்றி குற்றம் சாட்டக்கூடாது
ADDED : ஜன 30, 2024 05:54 AM
கவர்னர் தமிழிசை
புதுச்சேரி, ஜன. 30-
அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டக்கூடாது என கவர்னர் தமிழிசை கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்துள்ளதாகவும், கவர்னருக்கு தொடர்பு உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளதாக கேட்கிறீர்கள்.-
இதெல்லாம் சும்மா. என்ன தொடர்பு இருக்கிறது- அவர்களை என்னிடம் வந்து கேட்க சொல்லுங்கள். குழந்தைகளுக்கு நல்லது செய்துள்ளோம். எந்த தொடர்பும் எனக்கு இல்லை.
பணத்தை பற்றி பேசினால் கோபம் வரும். மருத்துவராக இருந்து சம்பாதித்து விட்டுதான் இங்கு வந்துள்ளேன். சம்பாதிக்க இங்கு வரவில்லை. அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டக்கூடாது.
புதுச்சேரியில் அவர் போட்டியிட எதிர்கட்சித் தலைவர் சவால் விட்டுள்ளது குறித்து கேட்டபோது; அவர் சவால் விட்டுக்கொண்டே இருக்கட்டும் பார்க்கலாம் என கூறினார்.