ADDED : பிப் 16, 2026 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை சார்பில் நாய் மற்றும் பூனை எழில் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் நேற்று நடந்தது.
கண்காட்சியில், 20 பிரிவுகளில் 160 நாய்கள், 10 பூனைகள் கலந்து கொண் டன. அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கி, சிறந்த நாய்கள் மற்றும் பூனைகளுக்கு பரிசு வழங்கினார். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., இயக்குநர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குநர் காந்திமதி உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

