உணவகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர் பறிமுதல்
உணவகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர் பறிமுதல்
ADDED : ஏப் 17, 2026 03:29 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: தள்ளுவண்டி உணவகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை 'புட்செல்' போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்காலில், சட்ட விரோதமாக ஓட்டல்களில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் காரைக்கால் கடற்கரை நடைபாதையில் இயங்கி வந்த தள்ளி வண்டி உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பயன்படுத்துவதை கண்டுபிடித்து, சிலிண்டர் மற்றும் 2 ரெகுலேட்டர்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தள்ளுவண்டி உணவக உரிமையாளரான காரைக்கால் டி.கே., நகர் முகமது காசிம், 70, என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
