ADDED : நவ 03, 2024 04:52 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : துார்தர்ஷனில் வேலை செய்த ஊழியர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கம்பேட் பகுதியை சேர்ந்தவர் லுார்துநாதன் மகன் ரியாஷன்,20; இவர் துார்தர்ஷனில் ஒப்பந்த அடிப்படையில், ஊழியராக வேலை செய்து வந்தார். வேலை கஷ்டமாக இருப்பதாக கூறி வந்த அவர், கடந்த 26ம் தேதி எலிபேஸ்ட் சாப்பிட்டார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
