ADDED : அக் 08, 2025 07:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அபிேஷகப்பாக்கத்தில் 9 லட்சம் மதிப்பில் வாய்க்காலை துார் வாரும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதி, அபிேஷகப்பாக்கம் - டி.என்., பாளையம் செல்லும் வழியில், அபிேஷகப்பாக்கம் வாய்க்கால் உள்ளது.
இந்த வாய்க்காலில், பூதர்கள் மண்டி கிடக்கிறது. இதனை மழை காலம் வருவதற்குள் துார் வார பொதுப்பணித்துறை சார்பில், 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்டம் உதவிப்பொறியாளர் ஸ்ரீநாத், பொதுப்பணித்துறை அதிகாரிகள், என்.ஆர்., காங், பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.