/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ ஓட்டுவதில் தகராறு டிரைவருக்கு வெட்டு
/
ஆட்டோ ஓட்டுவதில் தகராறு டிரைவருக்கு வெட்டு
ADDED : ஜன 12, 2025 04:09 AM
அரியாங்குப்பம் : ஆட்டோ ஓட்டுவதில் ஏற்பட்ட பிரச்னையில், டிரைவரை கத்தியால் வெட்டிய நபர் மீது வழக்கு பதிந்தனர்.
நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் குருநாதன், 52, இவர் தவளக்குப்பம் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டிய இவரது உறவினர் ஒருவர், கடந்த மாதம் இறந்தார்.
அவர் ஓட்டிய ஆட்டோவை, சங்கத்தின் உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்து, மற்றொருவர் மூலம் ஆட்டோவை குருநாதன் இயக்கினார்.
அதனால், ஏற்பட்ட பிரச்னையில், அஜித் மற்றும் சிலர், குருநாதனிடம் நேற்ற முன்தினம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த, அஜித், அருகில் காய்கறி கடையில் இருந்த கத்தியால், குருநாதனை தலையில் குத்தினார். காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர் கொடுத்த புகாரின் பேரில், அஜித் மற்றும் சிலர் மீது தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

