ADDED : ஆக 12, 2025 02:54 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் பொதுஇடத்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் நிரவி பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது நிரவி மேலஓடுதுறை விழிதியூர் மெயின் ரோடு அரசலாறு நடைப்பாதையில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் அவ்வழியாக சாலையில் சென்ற நபர்களை ஆபாசமாக பேசியுள்ளார். அவரை நிரவி போலீசார் பிடித்து விசாரித்ததில் மேலஓடுதுறை கீழத்தெருவை சேர்ந்த சிபிராஜ், 23 ;எனத் தெரியவந்தது.
போலீசார் சிபிராஜ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
