ADDED : அக் 09, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காட்டேரிக்குப்பம் மயிலம் பாதை சந்திப்பு அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்த வானுார், புதுப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகமணி, 58; என்பவரை போலீசார் கைது செய்தனர்.